
கிளிநொச்சி – பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் தனியார் பேரூந்து ஒன்று தீக்கிரையானதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று அதிகாலை ஒரு மணியளவில் திடீர் என பேருந்து தீப்பிடித்து எரிவதை அவதானித்த சாரதி மற்றும் அவரது குடும்பத்தார் தண்ணீரால் அணைக்க முயன்றும் முற்றாக அணைக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்து உரிமையாளர் கண்டியை சேர்ந்தவர் எனவும்மயில்வாகனபுரத்திலிருந்து கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிட்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி இறக்கும் பணியில் இருந்ததாகவும் நேற்று வேலைகளை முடித்து இரவு சாரதியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயமே சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகிறது.
குறித்த சம்பவம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடைபெற்றதா , யாராலும் தீமூட்டப்பட்டதா , அல்லது காப்புறுதி பெறுவதற்கு உரிமையாளர்களால் தீ மூட்டப்பட்டதா என்ற பல கோணங்களில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.





