வவுனியா சேக்கிழார் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்!!

753

 
வவுனியா சேக்கிழார் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த நேற்று (01.05.2016) ஞாயிற்றுக்கிழமை மன்றத்தின் தலைவர் கலாபூஷணம் க.ஜயம்பிள்ளை அவர்களின் தலைமையில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் மன்றத்தின் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றதுடன் புதிய தலைவராக மீண்டும் கலாபூஷணம் திருவாளர் க.ஜயம்பிள்ளை அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் மன்றத்தின் சைவத்தமிழ் மற்றும் சமூகப் பணியை மேலும் முன்னெடுத்துச்செல்லும் நோக்கில் இளைஞர்களின் பிரதிநிதித்துவமாக பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையிலான வவுனியா கலைமகள் நற்பணி மன்றத்தினர் சேக்கிழார் மன்றத்துடன் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.நித்தியானந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

மன்றத்தின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

13087325_1757340857833351_5530845427350015086_n 13096315_1757340724500031_4940594931538555574_n 13133378_1757340837833353_4617912093271002386_n 13151526_1757340811166689_7795143350522489786_n 13151615_1757340777833359_7499172644269316767_n 13151629_1757340747833362_7138021524133426977_n