
வவுனியா மாவட்டத்தில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இன்று (02.05.2016) கடமையிலிருந்த பொலிசார் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடல்நிலை தற்போது தேறிவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
கடந்த சில வாரங்களாக வவுனியாவில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பலர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





