
அகதிகளாக தமிழகம் சென்ற 24 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கைதிகள் தொடர்பான ஆணையாளர் அலுவலகத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு நாடு திரும்புபவர்களில் ஏழ்வர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.
திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 பேரே இன்று இலங்கைக்கு மீளத் திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





