
வவுனியாவில் நேற்று முன்தினம் (02.05.2016) இரவு 7.15 மணியளவில் மகாறம்பைக்குளம் காத்தார்சின்னக்குளம் பகுதியில் வீடொன்றுக்குள் சென்று அங்கிருந்தவர்ளை அச்சுறுத்தி பெறுமதியான நகைகளை ஆயுதமுனையில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மகாறம்பைக்குளம் காத்தார்சின்னக்குளம் கிராமசேவையாளர் பிரிவிலுள்ள கருப்பிஞ்சாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் சென்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி இரண்டு சங்கிலி, ஒருசோடி காப்பு, நெக்லஸ் உட்பட 8 ½ பவுண் தங்க நகைகள் (340 000 பெறுமதி) தலையை மூடிய ழுமுக்கவசம் அணிந்து வந்தவர்களால் ஆயுதமுனையில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் மூவரடங்கிய குழுவினர் மோட்டார் சைக்கிலில் வந்துள்ளதாகவும,
அச்சமயம் வீட்டில் தாய், மகள் இருவரும் இருந்துள்ளனர். காலையில் தந்தை யாழ்ப்பாணம் சென்ற நிலையிலையே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்று இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





