
சிங்கப்பூரின் புவான்கொக் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக இம்சைக்குள்ளாக்கிய இலங்கை மாணவர் ஒருவருக்கு 10 வார கால சிறை தண்டனை விதக்கப்பட்டுள்ளது.யதோவிட்ட விதானகே புத்திக பத்மகுமார என்ற 28 வயதான குறித்த நபர், 33 வயதான பெண்ஒருவர் மின் உயர்த்தி ஒன்றில் வைத்து இவ்வாறு இம்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 13ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் இடம்பெற்ற தினம் இரவு குறித்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற அவர், கட்டிடம்ஒன்றின் மின்னுயர்த்தியில் வைத்து அந்த பெண்ணை தகாத வகையில் தொட்டு, அங்கிருந்துதப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவரது செய்கை சீ.சீ.ரீ.வி.கமராவில் பதிவாகி இருந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.





