
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் தலைவர் விராட் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கொல்கத்தா 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி தலைவர் விராட் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்துவீசிய குற்றச்சாட்டில் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவது 2வது முறையாகும். ஏற்கனவே அவருக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் அவர் இதுவரை 36 லட்சத்தை இழந்து உள்ளார்.
இதேபோல இந்த போட்டியில் வெற்றி கொண்டாட்டத்தின்போது கொல்கத்தா அணி தலைவர் காம்பீர் கதிரைகளை எட்டி உதைத்தார்.
இதற்காக அவருக்கு போட்டியில் பெறும் பணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.





