சட்டக்கல்லூரி மாணவி படுகொலை : உடலில் 38 இடங்களில் காயம் : போராட்டம் வலுக்கிறது!!

633

Students

கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் பெரும்பாவூர் குருப்பம் பட்டியைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் கடந்த 28ம் திகதி கொடூரமாக முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் தனியாக இருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்தது.

சட்டக்கல்லூரி மாணவியின் கொலை நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்திலும் மாணவி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகப்படும்படியாக உள்ள 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி ஷிஜாவின் தாயார் ராஜேஸ்வரி, மகளுக்கு நடந்த இந்த கொடூரத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உடல் நிலை பாதிக்கப்பட்டு பெரும்பாவூர் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மாணவி ஷிஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாணவி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அவரது உடலில் 38 இடங்களில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு இருந்தது. வயிற்றில் கடுமையாக தாக்கியதால் அவரது பெருங்குடல் வெளியே வந்து கிடந்தது.

அவரது தலை முதல் உடல் முழுக்க காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொலையாளிகள் பயன்படுத்திய இரும்பு ஆயுதத்தால் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மாணவி ஷிஜாவின் உடல் உறுப்புகளை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.