வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் தற்போது வவுனியா வாடி வீடு மண்டபத்தில் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொது அமைப்புக்கள், வியாபார ஊழியர்கள் எனப் பலர் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர் . இக் கலந்துரையாடலுக்கு விவசாயிகள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






