பஸ் – கொள்கலன் நேருக்கு நேர் மோதி விபத்து! 16 பேர் வைத்தியசாலையில்!!

459

acc-main
இறக்குவானை – கவுடுவாவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பயணிகள் பஸ்ஸொன்று கொள்கலன் ஒன்றுடன் மோதியதனாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சாரதிகள் உட்பட விபத்தில் காயமடைந்த 16 பேர் கஹவத்த மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.