ஒலிம்பிக் போட்டிக்காக லஞ்சம் கொடுத்த ஜப்பான்?

432

olymp

2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை டோக்கியோவில் நடத்துவதற்கான உரிமையை ஜப்பான் ஏற்கனவே பெற்று இருக்கிறது. இந்த உரிமையை பெற சர்வதேச தடகள சம்மேளன தலைவர் லாமின் டியாக்கின் மகன் மூலம் பிரான்ஸ் ஒலிம்பிக் நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இதனை ஜப்பான் மந்திரி சபையின் தலைமை செயலாளர் யோஷிடே சுகா மறுத்துள்ளார். தாங்கள் நேர்மையான முறையில் தான் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற்று இருக்கிறோம். லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.