இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவிற்கும் அவரது மனைவி பிரியங்கா செளத்ரிக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஸ்ரேயன்ஷி (Shreyanshi) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கொல்கத்தாவுடனான ஐபிஎல் ஆட்டத்துக்குப் பிறகு, மனைவியை அருகில்இருந்து கவனித்துக்கொள்வதற்காக நெதர்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார் ரெய்னா.
ரெய்னாவின் மனைவி பிரியங்கா நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார்.
2008 முதல் ஐபிஎல்-லில் ஆடிவரும் ரெய்னாஇதுவரை ஒரு ஐபிஎல் போட்டியைக்கூட தவறவிட்டதில்லை.
மனைவியின் பிரசவத்துக்காக அவர் நெதர்லாந்து சென்றதால் சில போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ரெய்னாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு சக வீரர்கள், டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






