சிறிய ஆபிரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் எரிக் துசீங்கிஸிமானா புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது அவர் நீண்ட நேரம் வலைப்பயிற்சி செய்து இதுவரை சாதனையாக இருந்த 51 மணி நேர வலைப்பயிற்சி சாதனையை முறியடித்துள்ளார்.
ருவாண்டாவில் முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே அவர் தொடர்ச்சியாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
உள்நாட்டு போரினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ருவாண்டாவில் இது போன்ற நடவடிக்கைகள் மூலம் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆதரவு சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.






