ஒரு மில்லியன் டொலர் இழப்பீடு கோரும் இலங்கை கிரிக்கெட் சபை!!

445

Kusal-Thilanga

ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக இலங்கை அணியின் தொடக்க வீரர் குஷால் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்திருந்தது.

இந்நிலையில் அவர் ஊக்க மருத்து எடுத்துக் கொண்டதாக வெளியான அறிக்கையில் பிழை இருந்ததாக கூறி அவர் மீதான தடையை ஐசிசி உடனடியாக நீக்கியது. ஆனால் இந்த சம்பவத்தால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு மில்லியன் டொலரை இழப்பீடாக கேட்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குஷால் பெரேரா மீது பொய்யான அறிக்கை சமர்பிக்கப்பட்டது, இதனால் நஷ்டஈடு கேட்க உரிமை உள்ளதாக கூறியுள்ள கிரிக்கெட் சபை, இதற்கு முன்னதாக குஷாலை அணியில் இணைத்துக் கொள்வதே முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.