திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நடிகை நமீதா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்.
அப்போது அவர் தேர்தல் பிரசாரத்துக்கு விரைவில் வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை அவரை பிரசாரத்துக்கு புக் செய்ய செய்யவில்லை. இதனால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் நமீதாவின் உதவியாளர் கூறுகையில், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர வேண்டும் என்பது நமீதாவின் விருப்பம். ஆனால் பிரசாரத்துக்கு தலைமைக் கழகத்தில் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. இதனால் அவர் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், அடிப்படை உறுப்பினராகச் சேரும் பிரபலங்கள், பிரசாரத்துக்கு வரவேண்டும் என்பதில்லை என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சமரசம் விளக்கம் அளித்துள்ளார்.
சில அதிமுக பிரமுகர்கள் கூறுகையில், அரசியல் மேடையில் பேசும் அளவுக்கு நமீதாவுக்கு பக்குவம் இல்லை. அதுமட்டுமல்லாது அவருக்கு தமிழும் தெரியாது. இதனால் எதையாவது பேசி மீம்ஸ், வீடியோ என கேலிப்பொருள் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அழைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.






