திருட்டு டிவிடியின் தாக்கத்தால் தமிழ் சினிமா பெரும் ஆபத்தை எதிர்கொண்டு வருகிறது. சமீப நாள்களில் திருட்டு டிவிடியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
24 படம் வெளியான மறுநாளே அப்படத்தின் திருட்டு டிவிடி வெளியானது. அந்த டிவிடி பெங்களூருவில் உள்ள திரையரங்கில் வைத்து எடுக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இந்நிலையில் சென்ற சனிக்கிழமை வெளியான பென்சில் படத்தின் திருட்டு டிவிடியும் மறுநாளே வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்தது. படத்தின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ் கமிஷனர் அலுவலகம் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார்.






