முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் வடக்கு முதலமைச்சர்!!

501

 
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் ஏழாம் ஆண்டு நினைவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், மத குருமார்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், ரவிகரன், டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FB_IMG_1463556491158 FB_IMG_1463556507766 (1) FB_IMG_1463556507766 FB_IMG_1463556541875 FB_IMG_1463556556840 (1) FB_IMG_1463556556840 FB_IMG_1463556572742 FB_IMG_1463556592164 (1)