அவுஸ்திரேலியாவில் நடந்த விபத்தில் பலியான சகோதரிகள்!!

975

sisters_pic

அவுஸ்திரேலியாவில் நடந்த வீதி விபத்தில் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள பல்கலைகழத்தில் படித்துக் கொண்டே மருத்துவத் தாதியாக பணியாற்றி வந்தவர் அன்ஜூமோல் (வயது 23). இவரது சகோதரியான ஆஷா மேத்யூ(18) என்பவரும் அதே பல்கலைகழகத்தில் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 23ம் திகதியிலிருந்து இருவருடன் எந்தவித தொடர்பும் இல்லாத காரணத்தினால் சந்தேகமடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இருவரும் வீதி விபத்தில் பலியானது தெரியவந்துள்ளது.

குயின்ஸ்லாந்து பகுதியில் சாலையை கடந்து காரில் செல்ல முயன்ற போது, மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்களது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக உறவினர்கள் இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர்.