
மனைவியை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் 15 ஆம் ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.2008ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி நடந்த கொலை சம்பவம் தொடர்பில் மாத்தறை கனங்கே பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான நபருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதிக மது போதையில் வந்து மனைவியுடன் தகராறை ஏற்படுத்தி, மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.இது திட்டமிட்ட கொலை அல்ல எனவும் தவறாக நடந்த கொலை சம்பவத்திற்கு நபர், குற்றவாளி என கூறிய மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த குற்றவாளிக்கு 15 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.





