104 பேர் உயிரிழப்பு; 99 பேரை இதுவரை காணவில்லை!!

464

THANGA_SRI_LANKA_FL_352215f

வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 6043 குடும்பங்களின் 21,484 பேர் இன்னும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமை காரணமாக 104 பேர் உயிரிழந்துள்ளதுடன், 99 பேரை காணவில்லை என்றும் அந்த நிலையம் கூறியுள்ளது. அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 பேர் என்று கூறப்பட்டுள்ளது. 4,414 வீடுகள் பகுதியளவிலும், 623 வீடுகள் முழுமையாகவும் அழிவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.