14 வயது சிறுமி 6 நபர்களால் பாலியல் வன்புனர்வு: சித்தப்பா முக்கிய குற்றவாளி – ஆந்திராவில் நடந்த கொடூரம்!!

439

1 (54)
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின், Pedapadu mandal பகுதியில் உள்ள Khajigudem கிராமத்தில் 14 வயது சிறுமி ஆறு நபர்களால் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.கடந்த மே 20ம் திகதி பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார், சிறுமியின் அப்பா, அம்மா அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள் என நன்கு அறிந்த ரவி(வயது 30) என்னும் நபர், அவரின் நண்பர்கள் ஐந்து பேருடன் வீட்டில் நுழைந்துள்ளார்.பின்னர், ஆறு பேரும் சிறுமியை அடித்து சித்ரவதை செய்து பாலியல் வன்புனர்வு செய்துள்ளனர்.

சம்பவத்தின் போது சிறுமியின் சித்தப்பா, சித்தி வீட்டிற்குள் நுழைந்ததாகவும், அவர்களை ரவி வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சம்பவத்தை பெற்றோரிடம் கூற பயந்த சிறுமி, உடல் ரீதியாக அவதிப்பட்டு வந்துள்ளார், இதை கவனித்த பெற்றோர் சிறுமியை அதட்டிக் கேட்க அவர் கண்ணீருடன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

பெற்றோர் உடனே பொலிஸ் நிலையத்தை நாடி உள்ளனர், இதன் மூலம் குறித்த சம்பவம் தற்போது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.வழக்கு குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திய பொலிசார், சிறுமியின் சித்தப்பா தன், அண்ணனுடன் எற்பட்ட பழைய பகை காரணமாக ரவியை பாலியல் வன்புனர்வு செய்ய ஊக்குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட ரவி உட்பட ஐந்து பேரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.