நடிகை பிரியா மணிக்கு (31) அவரது நீண்ட கால நண்பர் முஸ்தபா ராஜுடன் பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் பிரியா மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், “எனக்கும் முஸ்தபா ராஜுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் பிரியா மணி நடித்துள்ளார். “பருத்தி வீரன்’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார்.






