உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில் வட்ஸ் அப் முதலிடம் பிடித்துள்ளது.
ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் (அப்ஸ்)செயலிகள் தொடர்பன வரிசைப்பட்டியலை வெளியிடும் “சிமிலர்வெப்” இணையத்தளம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 109 நாடுகளில் வட்ஸ் அப் செயலி பயன்படுத்தப்பட்டுவருவதாக இந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
வட்ஸ் அப் பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ் அப் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 94 சதவீத அன்ரொய்ட் கருவிகளில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பேஸ்புக் மஸஞ்சர் செயலி பெற்றுள்ளது. இந்த செயலி 49 நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.