குருநாகல் – அளவ்வ, சியம்பலாபிடிய பிரதேசத்தில் தாய் ஒருவர், தனது 5 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, தனது 5 மாத குழந்தை தாய் பால் அருந்தாமை காரணமாகவே குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதன் போது தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மூத்த பிள்ளை பாடசாலை சென்றிருந்ததாகவும், சம்பவம் குறித்து சியம்பலாபிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னனெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






