பூப்பறிக்க சென்ற குடும்பஸ்தர் குளத்தில் மூழ்கி மரணம்!!

524

Dead in water

வைரவர் பூசைக்கு பூப்பறிக்க சென்ற குடும்பஸ்தர் குளத்தில் மூழ்கி மரணம்நிகழ்ந்த சம்பவம் நேற்று அம்பாறை மாவட்டம், அன்னமலையில் இடம்பெற்றுள்ளது .

நேற்று மாலை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்னமலை தாமரைக் குளத்தில்பூப்பறித்துக் கொண்டிருந்த அன்னமலை இரண்டை சேர்ந்த 45 வயதுடைய இரண்டுகுழந்தைகளின் தந்தையான சிற்றம்பலம் அருளம்பலம் என்பவரே குளத்தில் மூழ்கிசடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

வீட்டில் இடம்பெறவிருந்த வைரவர் பூசைக்கு தாமரைப் பூப் பறிக்க சென்றவேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

நேற்று இரவு 7.30 மணிக்கு சடலம்மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சவளக்கடை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.