டிக்கோயா பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
லுனுகலை பகுதியினை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மூங்கில் மேல் நின்று வேலை செய்துகொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக டிக்கோயா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






