43 வயதில் மகளுடன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பெண்!!

489

492934-students-exam

மும்பையில் 43 வயதான குடும்பபெண், தனது 16 வயது மகளுடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றுள்ள சம்பவம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.இரண்டு மகள்களுக்கு அம்மாவான Sarita Zagade, கடந்த மார்ச் மாதம், முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்,

நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், Sarita Zagade 44 சதவீத மதிப்பெண்களுடனும், அவரது மகள் 69 சதவீத மதிபெண்களுடனும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.Sarita Zagade, சிறு வயதில் வறுமையின் காரணமாக தனது படிப்பை நான்காம் வகுப்புடன் நிறுத்தியுள்ளார்,

திருமணத்திற்கு பிறகு வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் அவரது கணவர் விஸ்வநாத்தின், உக்குவிப்புடன் இரவு நேர பள்ளிக்கூடத்தில் 8ம் வகுப்பில் சேர்ந்து தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.எனினும் 35 வருடங்களுக்குபின் பள்ளிக்கு சென்று படிக்க தான் அச்சப்பட்டதாக கூறும் Sarita Zagade, சில நாட்களுக்குபிறகு படிப்பை விரும்பி படித்தாக தெரிவித்துள்ளார்.Sarita Zagade, மூத்த மகள் இதே வருடம் 12 வகுப்பு தேர்வு எழுதி 48 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வின் போது, மூவரும் ஒன்றாக சேர்ந்து திட்டமிட்டு படித்ததாக Sarita Zagade குறிப்பிட்டுள்ளார்.