யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அங்கவீனராக்கப்பட்டவர்களுக்குமான உதவிகளை அரசாங்கம் விசேட மருத்துவர்களைக் கொண்டு பராமரிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமையை வரவேற்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.






