முப்பது வருடங்களாக நடந்த போரை முப்பது நாளில் நிறுத்த முடியாது : விஜயகலா மகேஸ்வரன்!!

598

Vijeyakala

நாட்டில் முப்பது வருடகாலமாக நடந்து வந்த போரை முப்பதே நாட்களில் நிறுத்த முடியாது. இந்த அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் தான் ஆகின்றது. இன்று நடைபெறுகின்ற சம்பவங்களை படிப்படியாகத் தான் இடைநிறுத்த முடியுமென சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.