வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்றும் (10.06.2016),நேற்று முன்தினமும்(09.06.2016)இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.கல்விப் பணிப்பாளர் திரு .வைரமுத்து ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில், கனகராயன்குளம் மகாவித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாம் நாள் நிகழ்வில்
வவுனியா தெற்கு வலயகல்விப் பணிப்பாளர் திருமதி. அன்டன் சோமராஜா பிரதம விருந்தினராகவும் ஓய்வு பெற்ற வவுனியா வடக்கு வலயத்தின் முன்னாள் பணிப்பாளர் திரு.ஆ.பொன்னையா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் பங்குபற்றியிருந்தனர்.மேலும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மு. சிதம்பரநாதன் அவர்கள் நவீன கற்பித்தல் நுட்பங்கள் என்னும் தலைப்பில் ஆசிரிய மாநாட்டின் போது பேருரை ஆற்றினார் .
ஆய்வறிக்கைகள் மற்றும் அரங்க செயற்பாடுகளை வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர்கள் வழங்கியிருந்தனர்.
நேற்று இடம்பெற்ற இரண்டாம் நாள் நிகழ்வின் போது
வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம அதிதியாகவும் முன்னாள் வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு .த .மேகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வட மாகாணசபை உறுப்பிர்களான ஜி.ரி. லிங்கநாதன், ஆர். இந்திரராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தற்போதைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் முன்னாள் வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளருமானசி . தண்டாயுதபாணி அவர்கள் கலந்து கொண்டு இன்றைய ஆசிரியர் என்ற தலைப்பின் கீழ் பேருரையாற்றியிருந்தார்.
மேலும் ஆசிரியோதயம் என்னும் ஆசிரிய மாநாட்டு மலர் வெளியீடும் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கல்வியியலாளர்ககளை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
வவுனியா வடக்கு வலயத்துக்குட்பட்ட பிரதிகல்விப் பணிப்பாளர்கள் உதவி கல்விப்பணிப்பளர்கள் உட்பட நெடுங்கேணி ஓமந்தை கோட்ட கல்வி அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையை சார்ந்த பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.






