40 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் நிர்க்கதி!!

525

27 Feb 2013, Sumatra, Indonesia --- epa03602854 Rohingya refugees sleep on the floor of the immigration office in Lhok Seumawe, northern Aceh, Indonesia, 27 February 2013. Around 120 Rohingya refugees, including six woman and two children, were rescued by local fisherman after getting stranded at sea while heading for Australia. The Rohingyas are a Muslim minority from Rakhine State in the west of predominantly Buddhist Myanmar. Human Rights groups say they suffer much abuse and are denied free movement, education and employment by the military junta. EPA/HOTLI SIMANJUNTAK --- Image by © HOTLI SIMANJUNTAK/epa/Corbis

இலங்கை அகதிகள் 40 பேர் இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் அநாதரவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் பயணித்த படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்கு உள்ளானதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்ததாக ஆச்சே மாநிலத்தின் லோக்னா மாவட்ட இராணுவ பிரதான அதிகாரி மேஜர் தருல் அமீன் தெரிவித்துள்ளார்.

டி.என்.1எப்.வீ-00455.09 என்ற இலக்கத்தை கொண்ட இந்த படகு, 17 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமும் கொண்டது என அவர் கூறியுள்ளார்.

படகில் வந்தவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அகதிகளில் பெண்களும் சிறுவர்களும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.