CCTV காணொளிகளை அடிப்படையாக கொண்டு, வீதி விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான சட்டங்களை மேலும் கடுமையாக்குவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.
CCTV காணொளிகளை அடிப்படையாக கொண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்வதாக அந்த சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் காணப்படும் குறைப்பாடுகளினூடாக குற்றவாளிகள் தண்டனை பெறுவதிலிருந்து தப்பித்துக்கு கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, CCTV காணொளிகளை அடிப்படையாக கொண்டு , போக்குவரத்து தொடர்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மேலும் வலுப்படுத்துவதற்கான சட்டதிட்டங்களை கடுமையாக்குவது அவசியமானதொன்று எனவும் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.






