
தாய்லாந்தில் வீட்டுக்குள் புகுந்த இராட்சத பல்லியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் நான்ந்தாபரி என்ற மாகாணத்தின் கிராம பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று, மீண்டும் வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்த இராச்சத பல்லி வீட்டின் முன்பகுதியல் இருந்துள்ளது. கொட்ஸில்லா என்ற ஆங்கில திரைப் படத்தில் வரும் ஒரு வகை இராட்சத பல்லி இனம் போன்று இது இருந்ததாக அந்நாட்டு வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சில மணி நேரத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளதாக அந்நாட்டு இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





