
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பட்ரன்வாலியை சேர்ந்த தவுபீக் அகமது, முகாதாஸ் பீபி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.தற்போது 8 மாத கர்ப்பமாக இருந்த முகாதாசை மன்னித்து ஏற்றுக்கொள்வதாக கூறி, அவரது தாய் அம்னா தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு கர்ப்பிணி என்றும் பாராமல், முகாதாசை சித்ரவதை செய்து கழுத்தை அறுத்து அவரது குடும்பத்தினரே கொன்றுள்ளனர்.இக் கவுரவ கொலை தொடர்பாக முகாதாசின் தாய், தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இக்குடும்பத்தினர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குடும்பத்தினரின் விருப்பமின்றி அவள் விருப்பத்துக்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்துக்கொண்டாள்.இதனால் நாங்கள் மிகுந்த அவமானத்துக்கு ஆளானோம், இதனால் எப்படியாவது அவளை கொலை செய்ய வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டோம், அதன்படியே அதனை தற்போது நிறைவேற்றியுள்ளோம் என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, சமீபத்தில் தான் காதல் திருமணம் செய்த மகளை தாயார் ஒருவர் எரித்துக்கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





