கைப்பேசியில் ஆபாசமான படங்களை பகிர்ந்தால் சிறை தண்டனை: வருகிறது புதிய சட்டம்!!

485

med_r-sex-video-high-school-large570
சுவிட்சர்லாந்து நாட்டில் கைப்பேசி மூலம் ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை பகிர்ந்தால் கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸ் நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டம் கூடியபோது இந்த சட்டம் தொடர்பான கோரிக்கை ஒன்று கொண்டு வரப்பட்டது.அப்போது, Viola Amherd என்ற நாடாளுமன்ற உறுப்பினர் பேசியபோது ‘வீடுகளில் எடுக்கப்படும் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோ படங்களை நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ளும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது.

சில நேரங்களில் சம்மந்தப்பட்ட நபரின் அனுமதி இல்லாமல் அப்புகைப்படங்கள் பகிரப்படுவதால் அவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நடவடிக்கையை தடுப்பது தொடர்பாக ஏற்கனவே ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அது திறம்பட செயல்படாத காரணத்தினால் இக்குற்றத்தை தடுக்கு புதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவருடைய கோரிக்கைக்கு அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.எனினும், இந்த கோரிக்கை நாடாளுமன்ற மேல் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்படும்.பின்னர், இந்த சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிறகே இதனை செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.