
மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், 102 வயது முதியவருக்கு தவறான கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடியா மாவட்டத்தில் இருக்கும் ஒரு அரசு மருத்துவமனையிலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
சாந்தி பாலா(102வயது), தனது இடது கண் கண்புரை அறுவை சிகிச்சைக்காக JNM மருத்துவமனையை அனுகியுள்ளார்.ஆனால், டாக்டர் அலட்சியமாக அவருக்கு வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அறுவை சிகிச்சை செய்த டாக்டர், மருத்துவமனை முதல்வர் சாந்தனு பானர்ஜி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, பானர்ஜி கூறியதாவது, சாந்தி பாலாவின் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை அவரின் குடும்பதினருக்கு தெளிவாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். சாந்தி பாலாவின் மருமகன் நாராயண் பிஸ்வாஸ் பொலிசில் அளித்துள்ள புகாரில், அறுவை சிகிச்சைக்கு முன் டாக்டர் தன்னிடம்,நோயாளிக்கு வலது கண்ணிலும் பிரச்சனை இருப்பதாக கூறியதாகவும். அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற போது சாந்தி பாலாவின் வலது கண்ணில் இருந்து இரத்தம் வெளிவர தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், டாக்டர் தவறை ஒப்புக்கொண்டு, பொலிசிடம் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டாம் என கூறியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த வழக்கில் நடவடிக்கை முன்னெடுக்க பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





