மகனின் அவல நிலையைப் பார்த்து பார்வையற்றோருக்கான ஓவியம் வரையும் கருவியை உருவாக்கிய தந்தை!!

1013

Dulip

பார்வையற்ற மகனின் அவல நிலையை கண்டு வருந்திய தந்தை, தன் மகனுக்காக பார்வையற்றோர் ஓவியம் வரையும் தொலைநோக்கு கருவியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியான திலிப் பட்டே குறித்து கருவியை உருவாக்கியுள்ளார்.

“பிரக்யா“ என பெயர்வைக்கப்பட்டுள்ள குறித்த கருவி உலகின் முதல் பார்வையற்றோர் ஓவியம் வரைதல் சாதனமாக கருதப்படுகிறது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேசஅடையாளத்தை வென்றுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் இஸ்ரோவில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் திலிப் பட் கூறுகையில், பார்வையற்றோர் படும் கஷ்டங்களை தான் மகனினால் தன் உணர்ந்ததாகவும்,

அவர்களின் வாழ்க்கை பிரெயில் ஆறு புள்ளிகள் அடங்கும், அதை என் இயந்திர பொறியியல் பின்னணி மூலம் மாற்ற நினைத்தேன். என் மகனுக்கு புவியியல் மற்றும் மொழி கற்றுக் கொடுக்கும் பணியில் தீவரமாக இறங்கினேன்.

பினனர், 1.5×1.5அடி மர பலகையில் வெல்க்ரோ ஒட்டினேன், கம்பளி நூல் வெளியிடும் வகையில் ஒரு பேனாவை வடிவமைத்தேன்,தொட்டுணரக்கூடிய வகையில் நுால் வெல்க்ரோவில் ஒட்டிக்கொள்ளும்.

ஒவியம் முழுமையாக முடிந்த பின்னர், பார்வையற்றோர் பேனாவின் உதவியுடன் நுாலை மீண்டும் உருட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மின்சாரம் உதவி இல்லாமல் இயங்கும் குறித்த கருவி பல பார்வையற்றோர் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.