மது ஒழிப்பை வலியுறுத்தி, அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இன்று ( 22.06.2016) வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையில், முதற்கட்டமாக விழிப்புணர்வு வீதி நாடகம் பிரதேச செயலக வளாகத்தில் அரங்கேற்றப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் செல்வி நிவேதிகா பேரின்பநாயகம், வவுனியா வடக்கு பிரதேச செயலக கணக்காளர் திரு பா. நாகேஸ்வரபாலா, வவுனியா வடக்கு பிரதேச சபை செயலாளர் திரு க.சத்தியசீலன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




















