வவுனியாவில் இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை (21.06.2016) இரவு கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் இன்று மதியம் 2.00 மணியளவில் வவுனியா பூவரசங்குளம் காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட வர்த்தகர் தற்போது பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர் வெளியே வந்த பின்னரே யாரால் எதற்க்காக கடத்தப்பட்டார் என என்ற விபரங்கள் அறியமுடியும் என்பதால் ஊடகவியலாளர்கள் காத்திருந்த போதும் இதுவரை பொலிசாரின் விசாரணை முடிவடையவில்லை.
சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
மூன்று வாகனங்கள் இக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், உணவுகள் வழங்கப்படாமல் நீர் மட்டும் வழங்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.










