பாடசாலையின் மீது மரம் முறிந்து விழுந்ததால் கற்றல் நடவடிக்கை பாதிப்பு!!

925

school

டிக்கோயா, இன்ஜெஸ்ட்ரி தமிழ் வித்தியாலயத்தில், இன்று அதிகாலை வீசிய பலத்த காற்றினால் மரமொன்று முறிந்து விழுந்ததனால் பாடசாலையின் கூரை சேதமாகியுள்ளதுடன் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.பாலையா தெரிவித்தார்.

இதனால் தரம் 1, 10, 11 மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கணனி அறையும் பாதிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாடசாலையின் மைதானத்தில் இடம்பெற்று வருவதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு எடுக்க வேண்டும் எனவும், இது தொடர்பில் தொலைபேசியின் மூலம் கல்வித் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.