ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரித்தானியா மக்கள் வாக்களித்துள்ளனர்.மக்களின் இந்த தீர்ப்பு, பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன? பிரித்தானியாவின் அடுத்த நடவடிக்கைகள் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
இந்நிலையில் பேராசிரியராக பணியாற்றிவரும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த Fernando Rosell என்பவர் கடந்த 20 வருடங்களாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார். நேற்று காலை தன்னுடைய மகனுக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியாவில் வெளியேறினால் ஏற்படும் விளைவுகளை பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது உடனே, நாம் இனிமேல் பிரித்தானியாவில் வாழ முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளான்.
மகனின் இந்த கேள்வியால் ஒருகணம் உறைந்து விட்டாராம் Fernando Rosell. இதுமட்டுமல்லாமல், இவரது நண்பரின் மகனும் நான் பள்ளிக்கு செல்ல இயலாதா? என கேட்டுள்ளான். மற்றொருவருடைய மகன் தனது படுக்கையறையில் விழுந்து கதறி அழுதுள்ளான் என தனக்கும், நண்பர்களுக்கும் நேர்ந்த அனுபவங்களை விவரிக்கிறார்.மேலும் முதன்முறையாக தர்மசங்கடத்தை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.