வவுனியாவில் காணாமல் போன உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்!!

548

 
வவுனியாவில் இன்று சனிக்கிழமை (25.06.2016) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றிருந்தது.

கடந்த காலங்களில் இலங்கையில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்கள் எங்கேயென கோரியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணைடைந்து காணாமல் போன உறவுகளை தேடியறியும் குடும்பங்களின் சங்கம், மற்றும் மாவட்ட பிரஜைகள் குழு ஆகியன இணைந்து நடத்தியிருந்தன.

 1 DSC04802 DSC04804 DSC04806 DSC04808 DSC04812