
பிபில – பதுளை வீதியின் உனகொல்ல பகுதியில் பஸ் ஒன்று 10 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 27 பேர் காயமடைந்த நிலையில், பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிபிலயில் இருந்து சேனாபதிய நோக்கிய சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே, இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இல்லையென வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





