வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மின்சார நீர் இறைக்கும் இயந்திரம், விசை தெளிகருவி, தெளிகருவி, சிமேந்து, பிளாஸ்டிக் கதிரைகள் மற்றும் விவசாய உபகரணங்கள் என்பன வவுனியா மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அவர்களின் அலுவலத்தில் 25.06.2016 அன்று வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவினால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்க பணிமனையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தயானந்தன் மற்றும் இணைப்பாளர் க.சிறிமதன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.














