வவுனியா ஓமந்தைப் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் வவுனியாவிற்கான பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்துத்தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கையினை முன்வைத்து இன்று(28.06.2016) காலை வவுனியா காமினி பாடசாலைக்கு முன்பாக ஒன்றிணைந்த மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பேரணி நடைபெற்றது.
இப் பேரணியில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுடதுடன் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு பேரணியாகச் சென்று மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமாரிடம் மனு ஒன்றினையும் கையளித்தனர்.
இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா மற்றும் வவுனியா மாவட்ட கமக்கார அமைப்பக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




























