வவுனியா மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு புதிதாக கடமைகளைப் பொறுப்பேற்று திறம்பட செயற்பட்ட நீர்ப்பாசனப் பொறியியலர் ஒருவரை வவுனியா மாவட்ட நீர்பாசனத் திணைக்கள உயர் அதிகாரி இடமாற்றம் செய்துள்ளதைக் கண்டித்தும், அவ் இடமாற்றத்தினை உடனடியாக இரத்துச் செய்து மறுபடியும் அவ் அதிகாரியை நியமிக்குமாறும் கோரி இன்று(28.06.2016) காலை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்து வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார் அவர்களிடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளர்.
இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாவற்குளம், முகத்தான்குளம், செட்டிகுளம், இராசேந்திரகுளம், ஆகிய பகுதிகளின் கிராம அமைப்புக்கள், கமக்கார அமைப்பினர் கலந்து கொண்டனர்.