இரட்டையர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!!

946

Sucide

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் நெல்லிப்பரம்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). இவரது மனைவி ராதாமணி (52). இவர்களுக்கு திருசியா (20), தர்சனா (20) என்ற இரட்டை பெண் குழந்தைகளும், திருராஜ் என்ற மகனும் இருந்தனர்.

திருராஜ் வெளியே சென்று வருவதாக கூறி வெளியே சென்றார். பின்னர் இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதவை பல முறை தட்டியும் திறக்கவில்லை.

சந்தேகமடைந்த திருராஜ் இது குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் ஆலத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மற்ற பொலிசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் பாலகிருஷ்ணன், ராதாமணியும் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கினர். மற்றொரு அறையில் இரட்டையர்கள் திருசியாவும், தர்சனாவும் இறந்த நிலையில் தூக்கில் தொங்கினர்.

4 பேர்களின் உடல்களை மீட்ட பொலிசார் பாலக்காடு அரசு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு காரணமா? என்று டி.எஸ்.பி. ராமச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.