துருக்கி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு : 32 பேர் பலி!!

530

Turkey

துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

விமான நிலையத்தில் உள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறை பகுதியில் இந்த குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

thr

An entrance of the Ataturk Airport in Istanbul after explosions, Tuesday, June 28, 2016. Two explosions have rocked Istanbul's Ataturk airport, killing at least 10 people and wounding around 20 others, Turkey's justice minister and another official said Tuesday.  (DHA via AP) TURKEY OUT