முதலையுடன் போராடி தாயைக் காப்பாற்றிய தனயனுக்கு வீடு வழங்கிய சபாநாயகர்!!

541

Mother save

முதலை ஒன்றிடம் சிக்கிக் கொண்ட தனது தாயை குறித்த முதலையுடன் போராடி மீட்டெடுத்த இளைஞர் ஒருவருக்கு புதிய வீடொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் – இபலோகம பிரதேசத்தைச் சேர்ந்த ரொமேஸ் மதுவந்த என்ற இளைஞனுக்கே புதிய வீடு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் சூரிய பதனம மூலமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வீடானது இன்றைய தினம் சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் வைத்தியர் வசந்தா ஜயசூரிய ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது