வவுனியாவில் இன்று(29.06.2016) மதியம் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த சாரதி காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியின் வயலுக்கு தண்ணீர் செல்லும் மதகில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீழ்ந்துள்ளது. எனினும் முச்சக்கரவண்டியில் சாரதியைத் தவிர வேறுயாரும் பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.